மலரே பேசு!

மலரே நீ பேசு!!
உன்னை ரசித்துச்
செல்லும் மனிதர்கள்
பல பல...
செயலும் எண்ணமும்
பல பல...
உன்னைக் கிள்ளினாலும்
சிரிப்பாய்...
அனைவருக்கும்
இன்பம் அழிப்பாய்
வண்ணங்களும்
வசந்தங்களும் பல பல...
ஒரு நாட்பொழுதில்
தோன்றி மறைவதால்
உனக்கு ஏதேனும்
வருத்தம் உண்டோ ???
            
               - சு.கஸ்தூரி

Comments

Post a Comment

Popular posts from this blog

வகை (2) சுற்றுப்புறச் சூழல் – கட்டுரைப் போட்டி – 2015

செல்லம்மா...

யாதுமாகி நின்றாள்