மழை

சின்ன சின்ன துளிகளாய்
மண்ணில் வந்து வீழ்வாய்
சின்னஞ் சிறுக் குழந்தைகள்
சிரித்து மகிழ வருவாய்
வண்ண வண்ண பூக்கள்
பூத்து குலுங்க வருவாய்
வயல்கள் செழிக்க வருவாய்
விவசாயிகள் மனமகிழ வருவாய்
உன்னை வெறுத்து ஒதுக்குபவர்
உலகில் யாரும் இல்லை
உன்னைப் பார்த்து ரசித்த
அந்த சில நிமிடங்கள்
கனவாய் வந்து நிற்கும்

கலைந்துபோகாமல்.........

               -சு.கஸ்தூரி

Comments

Popular posts from this blog

வகை (2) சுற்றுப்புறச் சூழல் – கட்டுரைப் போட்டி – 2015

செல்லம்மா...

யாதுமாகி நின்றாள்